2015-10-10 15:31:00

14வது உலக ஆயர்கள் மாமன்றம் : பத்திரிகையாளர் சந்திப்பு


அக்.10,2015. வத்திக்கானில் இச்சனிக்கிழமை காலையும், இவ்வெள்ளி மாலையும் நடைபெற்ற 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 75 மாமன்றத் தந்தையர் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

இந்த பேரில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், மேலும், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் என்று கூறிய அருள்பணி லொம்பார்தி, இச்சனிக்கிழமை காலை அமர்வில் ஓர் இந்தியத் தம்பதியரும்   சான்று பகிர்ந்தனர் என்றும் அறிவித்தார்.

இச்சனிக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் அருள்பணி லொம்பார்தி, இந்தியாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் கர்தினால் Baselios Cleemis Thottunkal, திருஇதயங்கள் துறவு சபையின் தலைவர் அருள்பணி Javier Alvarez Osorio ஆகியோரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குடும்பத்தின் ஆன்மீகம், ஒவ்வொரு நாளும் குடும்ப வாழ்வில் விசுவாசம் வாழப்படும் முறை, திருஅவையிலும், வரலாற்றிலும் குடும்பத்தின் பங்கு போன்றவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.