2015-10-05 16:46:00

இடர்பாடு குறித்து சோர்ந்துபோகாமல், நம்பிக்கையில் நடைபோடுவோம்


அக்.05,2015. நிலையற்ற தன்மைகளாலும், பல்வேறு கொள்கைகளால் விதைக்கப்பட்ட சந்தேகங்களாலும் துயருறும் குடும்பங்களுடன் இறைவன் தங்கியிருக்கவேண்டும் என ஆவல் கொள்வோம் என, ஆயர்கள் மாமன்றத்தில் உரையாற்றினார் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிக்கோஸ் மராதியாகா.

ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் மராதியாகா, மேலோட்டமான சுகங்களிலும், மனச்சான்றிற்கு விரோதமான நிலைகளிலும், நுகர்வுக் கலாச்சாரத்திலும் இன்பத்தைக் காண முயலும் இன்றைய உலகில், தனிமனிதர்களின் சோகங்களும் அதிலிருந்துதான் பிறக்கின்றன என்பதை உணர்வோம் என அழைப்பு விடுத்தார்.

நேர்மையுடன் வாழ்வோம், துணிச்சலுடன் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால், இடர்பாடுகள் குறித்து சோர்ந்து போகாமல் நம்பிக்கையுடன் நடைபோடுவோம் என்றார். கலந்துரையாடல் வழியாக ஒன்றிப்பைக் காண்பது, அமைதியில் வாழ்வது, போன்றவை குறித்தும், குடும்பம் பற்றிய ஆயர்கள் மாமன்றத்தில் எடுத்துரைத்த கர்தினால் மராதியாகா அவர்கள், இறை உதவியுடன், குடும்பங்களுக்கான புதிய நாளின் துவக்கம் விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.