2015-09-23 16:27:00

கருவில் வளரும் குழந்தைகளுக்கு திருத்தந்தை ஆசிர்


செப்.23,2015. திருத்தந்தை, கியூபக் குடும்பங்களுக்கென தயாரித்து வைத்திருந்த உரையை முதலில் வழங்காமல் அந்நேரத்தில் எழுந்த தனது உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். நானும் கியூபக் குடும்பத்தில் ஒருவராக உணரச் செய்த கியூபக் குடும்பங்களின் அன்பான இனிய வரவேற்புக்கும், ஆர்வமிக்க சான்று வாழ்வுக்கும் நன்றி. இல்லத்தில், குடும்பத்தில் கிறிஸ்து தமது அன்பைக் காட்டுகிறார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது மறைக்கல்வி உரை நிகழ்வின்போது பல மக்களையும், பல பெண்களையும் கடந்து செல்கிறேன். பல பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதைக் காண்பித்து ஆசிர் கேட்கிறார்கள். நம்பிக்கையைத் தாங்கி கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நான் ஒன்றை இப்போது பரிந்துரைக்கிறேன். ஒரு குழந்தை நம்பிக்கையாக உள்ளது, குழந்தை நம்பிக்கையின் ஊற்று. இந்நேரத்தில் இப்பேராலயத்திலுள்ள கருவுற்றிருக்கும் பெண்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி அல்லது வானொலி வழியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் கருவுற்றிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் உங்கள் வயிற்றைத் தொடுங்கள். உங்கள் உதரத்தில் வளரும் குழந்தை ஆணோ, பெண்ணோ, ஒவ்வொரு குழந்தையையும் நான் ஆசிர்வதிக்கிறேன். தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளை ஆசிர்வதிக்கிறேன். அக்குழந்தைகள் தூயவர்களாக வளர்வார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் தாங்கியிருக்கும் குழந்தையிடம் கனிவுடன் இருங்கள், அன்பு காட்டுங்கள் என்று கருவுற்றிருக்கும் பெண்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.