2015-09-19 16:25:00

நைஜீரியாவில் இருந்து 5 இலட்சம் சிறார்கள் தப்பியோட்டம்


செப்.,19,2015. நைஜீரியாவில் கடந்த 5 மாதங்களில் இஸ்லாமிய தீவிரவாத குழுவான போக்கோ ஹராமின் தாக்குதலால், 5 இலட்சம் சிறார்கள் தமது இருப்பிடங்களை விட்டு தப்பி ஓடியுள்ளதாக ஐநா கூறியுள்ளது.

இதன் மூலம் நைஜீரியாவிலும், அண்டைய நாடுகளிலும் இருந்து தப்பி ஓடிய சிறார்களின் எண்ணிக்கை 14 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இவர்களுள் பாதிபேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ ஹராம் தீவிரவாத குழுவினால் நைஜீரியாவில் எழுந்துள்ள பதட்ட நிலைகளின் விளைவாக, பல்லாயிரக்கணக்கான சிறார்கள் போதிய சத்துணவின்றி வாடுகின்றனர். 

ஆதாரம் :  BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.