2015-09-18 16:14:00

திருத்தூதுப் பயணத்திற்கு, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


செப்.18,2015. "கியூபா நாட்டிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் நான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காக என்னுடன் சேர்ந்து செபியுங்கள். உங்கள் செபம் எனக்குத் தேவை" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளி நண்பகல் வெளியானது.

ஒவ்வொரு நாளும், @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில், ஒன்பது மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தை, ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்திற்கும் முன்னதாக, தான் செல்லவிருக்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் மொழிகளிலும், தன் செய்தியை வெளியிடுவது வழக்கம்.

இலங்கை, தென்கொரியா ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்ட வேளையில், சிங்களம், தமிழ், கொரிய மொழிகளில், திருத்தந்தை, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், "அநீதிகளும், துன்பங்களும் இருந்தாலும், ஆண்டவரின் வெற்றி நிச்சயம் உண்டு" என்ற வார்த்தைகள், இவ்வியாழனன்று திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்ற செய்தியாக இருந்தது.

அண்மையப் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் 659 டுவிட்டர் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும், இப்பக்கத்தைத் தொடர்வோரின் எண்ணிக்கை, 71,29,066 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிய வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.