2015-09-18 15:43:00

கடுகு சிறுத்தாலும்.. : அறிவாளியும் முட்டாளாவார்!


மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.

கூட்டத்திலிருந்த மாணவர் ஒருவர் எழுந்து, ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டார்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்,  ''முட்டாள் ஒருவர் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவர் தூங்கத் துவங்கினால் முட்டாளாகிவிடுவார்!' என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.