2015-09-12 15:20:00

திருச்சிலுவை மாட்சி திருநாளையொட்டி திருத்தந்தையின் டுவிட்டர்


செப்.12,2015. ஒவ்வொருமுறை நாம் சிலுவை அடையாளத்தை வரையும்போதும், தூய மூவொரு இறைவன் குறித்த பேருண்மைக்கு மிக நெருக்கமாக வருகிறோம் என்று, இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 14, வருகிற திங்களன்று, 'திருச்சிலுவையின் மாட்சி' என்ற திருநாள், திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, இந்த டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், அன்றன்றையச் சூழலுக்கு ஏற்ப, தன் கருத்துக்களை @pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் 9 மொழிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வருகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.