2015-09-12 15:37:00

ஜப்பான் கிறிஸ்தவர்கள் குறித்த கருத்தரங்கு, திருப்பீடத்தில்


செப்.12,2015. 17 மற்றும் 19ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில், ஜப்பானில் கிறிஸ்தவர்களின் இருப்பு குறித்த கருத்தரங்கு, திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றது.

வத்திக்கான் நூலகம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், 17 முதல் 19ம் நூற்றாண்டு வரையுள்ள ஜப்பான் கிறிஸ்தவ ஆதார படிவங்களும், அதன் மொழிபெயர்ப்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன.

வத்திக்கானில் உள்ள பத்தாம் பயஸ் அரங்கில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு, ஜப்பானின் கிறிஸ்தவ மறைசாட்சிகளை கௌரவிப்பதாகவும் இருந்தது என இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தோர் அறிவித்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.