செப்.08,2015. உலகில் தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் 122 நாடுகளுள் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று இந்தியர்களிடம் விண்ணப்பித்துள்ளது, இந்திய மத்திய நீர்வள அமைச்சகம்.
நீர்வள ஆதாரம் என எடுத்துக்கொண்டால், உலகிலுள்ள நீர்வளத்தில் 4 விழுக்காட்டையே கொண்டு, 180 உலகின் நாடுகளுள், 133வது இடத்தில் உள்ள இந்தியா, தண்ணீர் சிக்கனத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுள்ளது, மத்திய நீர்வள அமைச்சகம்.
இந்தியாவில் குடியிருப்புக்களுக்கு 8 விழுக்காடும், தொழிற்சாலைகளுக்கு 10 விழுக்காடும், விவசாயத்திற்கு 82 விழுக்காடும் தண்ணீரின் பயன்பாடு உள்ளதென அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |