2015-09-04 15:04:00

கடுகு சிறுத்தாலும்.. : கவலைகள் இடம் மாறின


ஒரு நாள் மாலை, வீட்டின் முன் பகுதியில், முல்லா, இங்கும் அங்கும் அமைதியின்றி நடந்து கொண்டிருந்ததை அவர் மனைவி கவனித்து என்ன விஷயம் என்று கேட்டார். ''பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய நூறு தினார் கடனை நாளைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியுள்ளது. கையில் ஒரு தினார்கூட இல்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை.'' என்றார் முல்லா. “அவரிடம் இந்த மாதம் தர முடியாது என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே?” என்றார் அவர் மனைவி. மனைவியின்  அறிவுரையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றவர், திரும்ப  வரும்போது, உற்சாகமாக  இருந்தார். மனைவி கேட்டார், ''நீங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டாரா?'' என்று. ''பாவம், இப்போது, அவர் அமைதியின்றி  வீட்டின் முன் பகுதியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார்'' என்று பதிலுரைத்தார் முல்லா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.