2015-08-31 16:32:00

ஈராக் கிறிஸ்தவர்களிடையே பிறரன்பு அமைப்புகளின் உதவிகள்


ஆக.31,2015. ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளால் விரட்டப்பட்டு, குர்திஸ்தான் தலைநகரான எர்பிலில் அடைக்கலம் புகுந்துள்ளவர்களுக்கு உதவும் நோக்கில், 1,80,000 பவுண்ட்களை வழங்க முன்வந்துள்ளது Aid to the Chrch in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

தலைநகர் எர்பில்லில் தஞ்சம் புகுந்துள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ புலம்பெயர்ந்தோரிடையே உணவு, கல்வி வழங்குதல் ஆகிய பணிகளை ஆற்றிவரும்  இயேசுவின் திரு இதய புதல்வியர் சபையினருக்கு இத்தொகையை வழங்கி, அதன் வழியே, புலம்பெயர்ந்தோருக்கு உதவ உள்ளது இந்த கத்தோலிக்க அமைப்பு.

ஈராக்கில் புலம்பெயர்ந்துள்ள கிறிஸ்தவர்களுக்கு பெருமளவான உதவிகளை வழங்கிவரும் Aid to the Chrch in Need என்ற பிறரன்பு அமைப்பு, கடந்த 18 மாதங்களில் ஈராக் நாட்டிற்கு 75 இலட்சம் யூரோக்களுக்கு மேல் வழங்கியுள்ளது.

இது தவிர, சூடானில், மூன்று பள்ளிகள் கட்டுவதற்கும், உக்ரைனில் ஆசிரியர் பயிற்சிக்கும் என பெரும் தொகைகளை உதவியாக வழங்கியுள்ளது இந்த அமைப்பு. 

ஆதாரம் :  CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.