2015-08-26 15:40:00

Mandya சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்


ஆக.26,2015. இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள Mandya சீரோ மலபார் மறைமாவட்டத்தின் அதிகாரத்திற்குள், பெங்களூரு, சிக்பள்ளப்பூர், கோலார், தும்கூர், இராமநகரா ஆகிய மாவட்டங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்துள்ளார்.

மேலும், Mandya சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சீரோ மலபார் ஆயர்களின் மாமன்றம், அண்மையில் தெரிவு செய்த, அருள்பணி அன்டனி கரியில் (Antony Kariyil, CMI) அவர்களின் நியமனத்தையும், திருத்தந்தை, இப்புதனன்று உறுதி செய்துள்ளார்.

கார்மேல் அமல அன்னை துறவுச் சபையைச் சேர்ந்த அருள்பணி கரியில் அவர்கள், அத்துறவுச் சபையின் அகில உலக தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

மேலும், "தன் செல்வங்கள்மீது அளவுகடந்த பற்று கொண்டுள்ள கிறிஸ்தவர், தன் பாதையைத் தவறவிட்டுள்ளார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, இப்புதனன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.