2015-08-25 15:47:00

ஏவுகணை வளாகத்திற்கு அப்துல் கலாம் பெயர்


ஆக,25,2015. இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இராணுவப் பயன்பாட்டிற்கான ஏவுகணைகள் வடிவமைப்பு மற்றும் அது குறித்த ஆய்வுகள் நடத்துவதற்கான ஏவுகணை வளாகம் உள்ளது.

இதில் DRDL, RCI மற்றும் MIDHANI ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த ஏவுகணை வளாகத்திற்கு நாட்டின் ஏவுகணை நாயகரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் பெயர் சூட்டப்படும் என DRDO அறிவித்துள்ளது.

மேலும், RCI வளாகத்தில் அப்துல் கலாம் அவர்களின் சிலை ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.