2015-08-21 15:10:00

மறைபரப்புப் பணிக்கு உதவுங்கள்,சுவிட்சர்லாந்து ஆயர்கள்


ஆக.21,2015. உலகளாவிய மறைபரப்பு ஞாயிறு நடவடிக்கைகளில் விசுவாசிகள் தாராள மனதுடன் பங்கெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

வருகிற அக்டோபர் 18ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறை கண்முன்கொண்டு சுவிட்சர்லாந்து ஆயர்கள் சார்பில் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Markus Büchel அவர்கள் இவ்வாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

"கிறிஸ்துவால் உறுதிப்படுத்தப்பட்டு நம்மை அர்ப்பணிக்கிறோம்!" என்ற விருதுவாக்குடன் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் Büchel அவர்கள், திருஅவைக்குள் ஒற்றுமையை ஊக்குவிக்கவும், மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் இந்த உலக  மறைபரப்பு ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலில் 1,109 மறைமாவட்டங்கள் இக்கட்டான நிலையில் உள்ளன என்றும், இவற்றுக்கு சுவிட்சர்லாந்து விசுவாசிகள் உதவுமாறும் கேட்டுள்ளார் ஆயர் Büchel.

பாப்பிறை மறைப்பணி கழகங்களின், சுவிட்சர்லாந்து ஆயர்களின் "Missio" நிறுவனம் 118 நாடுகளில் உதவிகள் தேவைப்படும் மறைமாவட்டங்களுக்கு உதவி வருகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.