2015-08-17 16:24:00

பாகிஸ்தானில் மழையால் பாதிக்கப்பட்டோரிடையே காரித்தாஸ் அமைப்பு


ஆக.17,2015. பாகிஸ்தானின் Mianwali மாவட்டத்தில், அண்மையப் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில், மூன்று மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது, பாகிஸ்தான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

208 பேரின் உயிரிழப்புக்கும் ஏறத்தாழ 20 இலட்சம் மக்களின் குடிபெயர்வுக்கும் காரணமாகியுள்ள அண்மைய மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ள பல்வேறு சமூக அமைப்புகளுடன், கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. 

மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள Mianwali  மாவட்டத்தின் மக்களுக்கு மூன்று மருத்துவ முகாம்களை அமைத்துக் கொடுத்துள்ள‌துடன், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் மையம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது Islamabad-Rawalpindi மறைமாவட்டத்தின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.

 ஒவ்வொரு முகாமிலும் மருத்துவரும் தாதியர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ உதவிகள் வழங்கும் திட்டம் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது, பாகிஸ்தான் தலத்திருஅவை 

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.