2015-08-17 16:02:00

கர்தினால் பரோலின்:இணக்க வாழ்வின் எடுத்துக்காட்டு-சிங்கப்பூர்


ஆக.17,2015. பல்வேறு மதங்களையும், கலாச்சரங்களையும் கொண்டுள்ள சிங்கப்பூர் நாடு, தொடர்ந்து இணக்க வாழ்வு மற்றும் மதிப்பின் எடுத்துக்காட்டாக விளங்குவதாக என்ற பாராட்டுக்களை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கிழக்குத் தீமோர் நாட்டில் தன் மேய்ப்புப்பணி பயணத்தை நிறைவு செய்து திரும்பும் வழியில், சிங்கப்பூரில் இருநாள்கள் பயணம் மேற்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், சிங்கப்பூரில் வாழும் கிறிஸ்தவர்களின் உயிர்த்துடிப்புள்ள ஈடுபாடு, திருஅவையின் வருங்காலம் குறித்த நம்பிக்கையைத் தருவதாக உள்ளது என்று கூறினார்.

பல்வேறு பிரச்சனைகளை, குறிப்பாக, மத அடிப்படைவாதம், மற்றும் பயங்கரவாதப் போக்குகளை சந்தித்துவரும் இன்றைய உலகில், உலக அமைதிக்கும், வளத்திற்கும் சிங்கப்பூர் நாடு ஆற்றிவரும் பங்களிப்பை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் பாராட்டினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.