2015-08-14 15:35:00

இந்தியா பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் முதல்முறையாக பேச்சு


ஆக.14,2015. இந்தியா பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

இதற்காக பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரத்துறை ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் அவர்கள் ஆகஸ்ட் 23ம் தேதி இந்தியா வருகிறார்.

முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், அண்மையில் பஞ்சாபிலும் தாக்குதல் நடத்தினர். தவிர காஷ்மீரில் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் பிடிபட்டுள்ளார். இச்சூழ்நிலையில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த மாதம் இரஷ்யாவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு முடிவு செய்யப்பட்டது.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.