2015-08-11 16:43:00

சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்துவது அதிர்ச்சியூட்டுகின்றன


ஆக.11,2015. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரத்தில் வெளியான, சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்தியது குறித்த செய்திகள் அதிர்ச்சியை அளித்துள்ளன என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு இயக்குனர் Cecil Chaudhry அவர்கள் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டக் குற்றக் கும்பல்களால், கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான சிறார் பாலியல் முறையில் துன்புறுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு, பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றைப் காணொளிப் படங்களாகவும் எடுத்திருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சிறார், ஏறக்குறைய 300 பேர் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

280க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் தொழிலுக்கு கட்டாயமாக உட்படுத்தப்படுவதைப் பதிவு செய்த ஏறக்குறைய 400 காணொளிப் படங்கள் கடந்த வாரத்தில் வெளியாகியதையடுத்து இஞ்ஞாயிறன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு.

அறிவற்ற மற்றும் வெட்கத்துக்குரிய இந்த நடவடிக்கையை வன்மையாய்க் கண்டித்துள்ள அம்மாநில அருள்பணி Cecil Paul அவர்கள், இச்சிறாரின் குடும்பங்களுக்குத் திருஅவையின் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.