2015-08-10 16:00:00

இயற்கையைப் பாதுகாக்க உலக செப நாள்- திருத்தந்தையால் அறிவிப்பு


ஆக.10,2015. இறைவனின் படைப்பான இயற்கைமீது நம் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, இயற்கைக்கான உலக செப நாளை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாள், இந்த உலக செப நாள் சிறப்பிக்கப்படும் என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே இந்நாள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையால் கடைபிடிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'Laudato Si' என்ற தன் அண்மையச் சுற்றுமடலின் தொடர்ச்சியாக, இந்த நாளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, இயற்கையைப் பாதுகாப்பதில் ஆற்றிவரும் பணிகள், இயற்கையைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவர்களின் கடமை, இயற்கைக்கு எதிரான கடந்த கால நடவடிக்கைகளுக்கு இறை இரக்கத்தை வேண்டுதல், இதில் கிறிஸ்தவர்களின் நம்பத்தகும் சாட்சியம், அசிசியின் புனித பிரான்சிஸின் எடுத்துக்காட்டு ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.