2015-08-06 16:49:00

சுற்றுச்சூழலை மையப்படுத்தி ஸ்வீடன் நாட்டில் திருப்பயணம்


ஆக.06,2015. சுற்றுச்சூழலை மையப்படுத்தி ஸ்வீடன் நாட்டில் திருப்பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் நடுவில் ஸ்வீடன் நாட்டின் Uppsala என்ற நகரில் துவங்கிய இத்திருப்பயணம், 630 கிலோ மீட்டர் தூரம் கடந்து, செப்டம்பர் 10ம் தேதி, ஸ்வீடனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Lund என்ற நகரை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் காலையிலும் செபத்துடன் துவக்கப்படும் இப்பயணம், மாலை 4 மணியளவில் நிறைவுச் செய்யப்படுவதாகவும், வழியில் காணும் அனைத்து பங்கு கோவில்களிலும் இக்குழுவினர் செபவழிபாடுகள் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பயணத்தின் ஒரு தொடர் முயற்சியாக, சுற்றுச்சூழல் உலக மாநாடு நடைபெறவிருக்கும் பாரிஸ் மாநகர் நோக்கிய பயணம், செப்டம்பர் 13ம் தேதி மேற்கொள்ளப்படும் என்றும், இத்திருப்பயண அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.