2015-08-03 17:04:00

அமெரிக்காவில் 29 கோவில்கள் திட்டமிட்டு கொளுத்தப்பட்டுள்ளன


ஆக.03,2015. இவ்வாண்டில் இதுவரையில் அமெரிக்க ஐக்கிய நாட்டில், 29 கிறிஸ்தவக் கோயில்கள் திட்டமிட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக  அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இவ்வாண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில், 79 கோவில்கள் தீவிபத்துக்குள்ளாகியதாகவும், அவற்றில் 21, விபத்துக்கள் என்றும், 29 தீ அழிப்புகள், நாசவேலைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், மீதியுள்ள 29ம் திட்டமிட்ட சதிகள் எனவும் கூறியுள்ளது இப்புதிய ஆய்வு.

இவ்வாறு கோவில்கள் தீக்கிரையாக்கப்படுவதற்கு நிறவெறிகளும், மத சகிப்பற்றத் தன்மைகளும், சிலரின் வெறித்தன நடவடிக்கைகளுமே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவக் கோவில்களுள் ஆப்ரிக்க-அமெரிக்க கோவில்களே அதிகம் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Catholic Online /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.