2015-07-31 16:32:00

கிறிஸ்தவர்கள் தங்களின் இந்தி மொழி விவிலியத்தை எழுதுகின்றனர்


ஜூலை,31,2015. இந்தியாவின் போபால் உயர்மறைமாவட்டத்தில் திருவிவிலியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் உயர்மறைமாவட்டத்தில் உள்ள அனைத்துப் பங்குகளிலும் கிறிஸ்தவர்கள் விவிலியத்தின் ஒரு பிரிவை இந்தி மொழியில் எழுத வேண்டும், இதன் வழியாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களின் சொந்த விவிலியத்தைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரைக் கொண்ட விவிலிய மித்ரா என்ற குழு இத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இத்திட்டத்தில் பங்கு கொண்ட ஒவ்வொருவருக்கும், இந்தி மொழி விவிலியம் ஒன்றும், பேனாவும் தாளும் கொடுக்கப்பட்டன.   

திருவிவிலியம் குறித்த விழிப்புணர்வையும், விவிலியத்தின் பிரிவுகளை எழுதுவதன் வழியாக, விவிலியம் பற்றிய அறிவையும் மக்களில் ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்று, விவிலிய மித்ரா தலைவர் அருள்பணி சுமான் குமார் திர்க்கி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.