2015-07-29 17:03:00

மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் பெண்களுக்கு JRS உதவி


ஜூலை,29,2015. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வரும் பெண்களுக்கு, இயேசு சபையின் JRS அகதிப் பணி அமைப்பு உதவி வருகிறது.

போர்ச் சூழல், பாலியல் உரிமை மீறல், தொடர் அடக்குமுறை போன்றவற்றை அனுபவித்த பின்னர், சொந்த நாட்டைவிட்டுக் கட்டாயமாக வெளியேறுகின்ற, கடத்தல்காரர்களுக்கு கட்டாயமாகப் பணம் கொடுக்க வேண்டிய சூழலை எதிர்கொள்கின்ற பெண்களிடம் இருக்கும் சில பொருள்களும் பல நேரங்களில் திருடப்பட்டு அநாதரவாக வேறு இடங்களைச் சென்றடைகின்றனர்.

பாகிஸ்தான், சொமாலியா போன்ற நாடுகளிலிருந்து பாங்காக் வந்துசேரும்  பெண்களுக்கு, உளவியல் மற்றும் பொருளாதார உதவிகளை ஆற்றி வருகிறது JRS அமைப்பு.

இப்படி புலம்பெயர்ந்து வரும் மக்களில் அதிகமாகப் பெண்கள், பாலியல் முறையிலும், இன்னும் பிற முறைகளிலும் பாதிக்கப்படுகின்றனர் என்று JRS அமைப்பின் உளவியல்-சமூக ஆலோசகர் ஜெனிஃபர் மார்ட்டின் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.