2015-07-28 15:38:00

பிரேசிலில் அருள்சகோதரி ஒருவர் கொலை


ஜூலை,28,2015. பிரேசில் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராகப் பல ஆண்டுகள் உழைத்து வந்த பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் சா பவுலோ மாநிலத்தில் Guaratinguetá நகரில் La Estrella போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அருள்சகோதரி Irma Odete Francisca அவர்கள் எட்டுமுறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருடுவதற்காக முகமூடி அணிந்து சென்ற நபர் ஒருவர் சகோதரிகளிடம் பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளார். பின்னர் இச்சகோதரியை கொலை செய்துள்ளார் என்று காவல்துறை கூறியது.

அருள்சகோதரி Francisca அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக La Estrella போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இம்மையத்தில் 350 பேர் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.