2015-07-25 16:17:00

14வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு மேலும் பல பிரதிநிதிகள்


ஜூலை,25,2015. வருகிற அக்டோபர் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை குடும்பம் குறித்து வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குகொள்ளும் மேலும் பல பிரதிநிதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருஅவையிலும், இக்கால உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்தில், தமிழகத்தின் தர்மபுரி ஆயர் இலாரன்ஸ் பயஸ் துரை ராஜ் அவர்கள் 2வது பதிலாளி பிரதிநிதியாகப் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களிலிருந்து  மேலும் பல பிரதிநிதிகள் மற்றும் பதிலாளிகளின் பெயர்கள் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குகொள்ளும் பிரதிநிதிகளின் பெயர்கள் கடந்த சனவரி 31, மார்ச் 25, ஜூன் 16 ஆகிய தேதிகளில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 24, இவ்வெள்ளியன்று மேலும் பல பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

மேலும், சேலம் ஆயர் சிங்கராயன் அவர்கள், இம்மாமன்றத்தில் கலந்துகொள்ளும் முதல் பதிலாளியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.