2015-07-22 16:04:00

சத்னா சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்


ஜூலை,22,2015. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சத்னா சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி Joseph Kodakallil அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று நியமித்துள்ளார்.

1965ம் ஆண்டு கேரளாவின் Upputhode எனும் ஊரில் பிறந்த அருள்பணி Kodakallil அவர்கள், 1991ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலை பெற்றார்.

திருவழிபாடு குறித்த ஆய்வை மேற்கொண்டு, உரோம் நகரில் முனைவர் பட்டம் பெற்ற அருள்பணி Kodakallil அவர்கள், கேரளாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் தன் பணிகளை ஆற்றினார்.

சத்னா சீரோ மலபார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் Matthew Vaniakizhakel அவர்கள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிஓய்வு பெற்றதையடுத்து, அம்மறைமாவட்டம் கடந்த ஓராண்டளவாய் ஆயரின்றி இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.