2015-07-22 16:12:00

குடும்பங்களில் கிறிஸ்துவைக் கொணரும் இளையோர் பணி


ஜூலை,22,2015. ஜூலை 24, இவ்வெள்ளி முதல், ஜூலை 26, வருகிற ஞாயிறு முடிய அர்ஜென்டீனாவின் இளையோர், குடும்பங்களில் கிறிஸ்துவைக் கொணரும் பணியில் ஈடுபடுவர் என்று, அந்நாட்டுத் தலத்திருஅவை அறிவித்துள்ளது.

அர்ஜென்டீனாவின் பல மறைமாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளையோர், Goya என்ற நகரிலுள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான பல பணிகளைச் செய்யமுன்வந்துள்ளனர்.

ஜூலை,24, இவ்வெள்ளியன்று ஆயர் Ricardo Oscar Faifer அவர்களால் நிறைவேற்றப்படும் திருப்பலியுடன் ஆரம்பமாகும் இளையோரின் பணிகளில், குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு, கலை கண்காட்சி ஆகியவை இடம்பெறும்.

வயது முதிர்ந்தவர்களைச் சந்தித்தல், நோயுற்றோருக்கு ஆற்றும் தனிப்பட்ட பணிகள் ஆகியவற்றையும் இளையோர் மேற்கொள்ளவிருப்பதாக, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.    

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.