2015-07-21 15:51:00

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஏழை நாடுகளுக்குப் பலனளிக்கும்


ஜூலை,21,2015. இப்பூமியைப் பாதுகாப்பதற்குரிய திட்டம் இக்காலத் தலைமுறைக்கு மட்டும் பயனாக இருப்பதாக அமையாமல், வருங்காலத் தலைறைகளுக்கும் பலனளிப்பதாய் அமைய வேண்டும் என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "Laudato Si,'" இறைவா உமக்கே புகழ் என்ற அண்மை திருமடல் பற்றிப் பேசிய பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள், கத்தோலிக்கரும், கிறிஸ்தவர்களும் இயற்கைமீது அன்பு செலுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென இத்திருமடல் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை இணைய பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள Lingayen-Dagupan  பேராயர் Villegas அவர்கள், வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில், திருத்தந்தையின் இயற்கையியல் குறித்த இத்திருமடல் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுவரும் வறிய நாடுகள் சமர்ப்பிக்கும் பிரச்சனைகளை, நன்மனம் கொண்ட மனிதர் அனைவரும் உற்றுக்கேட்டு, அவற்றுக்குத் தீர்வு காணுமாறு கேட்டுள்ளார் பேராயர் Villegas.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, மிகவும் வறிய நாடுகளுக்குப் பலனளிக்கும் என்றும் பேராயர் Socrates Villegas அவர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.