2015-07-18 16:10:00

முஸ்லிம் சகோதரர்களுடன் பாகிஸ்தான் ஆயர் Eid al Fitr விழா


ஜூலை,18,2015. Eid al Fitr விழாவை முன்னிட்டு பாகிஸ்தான் ஆயர் ஒருவர் தனது மறைமாவட்ட இஸ்லாம் மத மற்றும் அரசியல் தலைவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து விழா மகிழ்வைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இஸ்லாமியரின் நோன்பு மற்றும் செபத்தின் புனித ரம்ஜான் மாதம் நிறைவுற்ற Eid al Fitr விழாவை முன்னிட்டு பாகிஸ்தானின் சிந்து மாநில ஹைதராபாத் ஆயர் Samson Shukardin அவர்கள், சந்திப்பு மற்றும் உரையாடலை ஊக்குவிக்கும் விதமாக முஸ்லிம் மதப் பிரதிநிதிகளையும், அரசியல் தலைவர்களையும் வரவழைத்து இவ்விழாவிற்கான திருஅவையின் செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Pierre Tauran அவர்களின் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நட்பும் ஒத்துழைப்பும், உரையாடலும் நிலவ வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளார் ஹைதராபாத் ஆயர் Shukardin.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.