2015-07-16 15:43:00

கடுகு சிறுத்தாலும்–சொல்பவரில் அல்ல, சொல்வதில் கவனம் தேவை


ஒருவர், குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தார். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.  ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டார். ‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.  ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ எனக் கேட்டார் அவர். அதற்கு  சிறுவன், ‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’என்றான். சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரருக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டார் அவர். ‘‘போய்த்தான் பாருங்களேன்’என்று சிறுவன் சொன்னதும், அவர் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றார். சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டிக் கிடந்தன. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி, கீழே சிதறிய தேங்காய்களைப் பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரருக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது. ஆம். சொல்பவரைப் பார்க்காமல் சொல்லும் சொல்லில் கவனத்தைச் செலுத்தினால் செல்லும் நோக்கம் நிறைவேறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.