2015-07-15 18:12:00

இறையடி சேர்ந்த கர்தினால் Biffi அவர்களின் அடக்கம்


ஜூலை,15,2015. ஜூலை 11, கடந்த சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்த கர்தினால் Giacomo Biffi அவர்களின் அடக்கத் திருப்பலி, இத்தாலியின் Bologna பேராலயத்தில் கர்தினால் Carlo Caffara அவர்கள் தலைமையில், இச்செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது.

தன் திருத்தூது பயணத்தின் மத்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Biffi அவர்களின் மறைவுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, Bologna பேராயர், கர்தினால் Caffara அவர்களுக்கு தந்தியொன்றை அனுப்பியிருந்தார்.

1928ம் ஆண்டு பிறந்த கர்தினால் Biffi அவர்கள், Bologna பேராயராக, 1984ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு முடிய பணியாற்றினார். 1985ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

தன் 87வது வயதில் இறையடி சேர்ந்த கர்தினால் Biffi அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில் 221 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்களாய், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 120. 

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.