2015-07-02 16:17:00

இனிப்புப் பானங்களை அருந்துவதால் ஆண்டுக்கு 184000 இறப்புகள்


ஜூலை,02,2015. மிகுந்த இனிப்புச் சுவை கொண்ட பானங்களை அருந்துவதால் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இறக்கும் 25 ஆயிரம் பேர் உட்பட உலக அளவில் 1,84,000 பேர் வரை இறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் போதியளவு ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

1980ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை 187 நாடுகளில் ஆறு இலட்சம் பேர்களிடம் உணவு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

2010ம் ஆண்டில் மட்டும் 1,84,000 பேர் இறந்துள்ளதுடன் இவர்களில் 1,33,000 பேர் நீரிழிவு நோயினாலும், 45,000 பேர் இருதய நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்வின் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.