2015-06-29 16:17:00

கடுகு சிறுத்தாலும் – ஒவ்வொருவரிலும் எத்தனை பேர்?


ஒரு நாள் ஒரு பெரியவர் ஓர் இளைஞரைப் பார்த்து, தம்பி, நீ ஒரு ஆளா, இரண்டு ஆளா நீ எத்தனை ஆளுப்பா? என்று கேட்டார். இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயா, நான் ஓர் ஆள்தான் என்றார். இல்லை தம்பி, இப்படித்தான் நாம் எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால், உண்மையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் மூன்று பேர் இருக்கிறோம் என்றார். குழம்பிப் போன அந்த இளைஞர், அது எப்படி என்று கேட்டார். நாம் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பது ஒரு விதம். நம்மைப் பற்றி மற்றவர் நினைத்துக்கொண்டிருப்பது இரண்டாவது விதம். நம்மைப் பற்றி நமக்கும் தெரியாமல், அடுத்தவருக்கும் தெரியாமல் இருப்பது மூன்றாவது விதம் என்று விளக்கினார் பெரியவர். இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தம்பி, நான் என்னைப் பற்றி எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ அது ஒரு மனிதர். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றீர்களோ அது இரண்டாவது மனிதர். எனக்கும் தெரியாமல், உங்களுக்கும் தெரியாமல் எனக்குள்ளே ஒரு மனிதர் இருக்கிறார். அது மூன்றாவது மனிதர். ஆக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று மனிதர்கள் உள்ளனர் என்றார் அந்தப் பெரியவர். இதில் இன்னொரு மனிதரும் உள்ளார். அந்த நான்காவது மனிதர் யாரெனில், என்னைப் பற்றி எனக்கும் தெரியும், அடுத்தவருக்கும் தெரியும் என்பது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.