2015-06-27 16:37:00

குழந்தை திரேசாவின் பெற்றோர் உட்பட, மேலும் 4 புனிதர்கள்


ஜூன்,27,2015. திருஅவையில் ஏற்க‌ன‌வே அருளாள‌ர்க‌ளாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள நான்குபேரை புனித‌ர்க‌ளாக‌ அறிவிக்கும் ப‌டிநிலைக‌ளின் இறுதி நிலைப்பாடாக‌, அத‌ற்கு ஒப்புத‌ல் வ‌ழங்கியுள்ளார், திருத்த‌ந்தை பிரான்சிஸ்.

சிறார் காப்பக புதல்வியர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலிய அருள்பணியாளர் அருளாள‌ர் Vincenzo Grossi, சிலுவையின் சகோதரிகள் துறவுசபைத் தலைவியாகச் செயல்பட்ட, இஸ்பெயின் நாட்டவரான அருளாள‌ர் அமல உற்பவ அன்னையின் மரியா, பிரான்ஸ் நாட்டின் புனித குழந்தை தெரசாவின் பெற்றோர் Ludovico Martin, Maria Azelia Guérin ஆகியோரை புனிதர்களாக அறிவிக்கும், திருப்பீட புனிதர் படிகளுக்கான அவையின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவர்கள் நால்வரின் புனிதர் பட்டமளிப்பு விழா, வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி ஞாயிறன்று இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.