2015-06-25 16:45:00

திருத்தந்தை - ஒப்புரவு அருள் அடையாளத்தால், புதியதோர் இதயம்


ஜூன்,25,2015. ஒப்புரவு அருள் அடையாளத்தில், இயேசு நம்மை வரவேற்று, நமக்கு புதியதோர் இதயத்தை வழங்குகிறார் என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

"நம் பாவங்கள் அனைத்தோடும் நம்மை ஒப்புரவு அருள் அடையாளத்தில் வரவேற்று சந்திக்கும் இயேசு, அவர் அன்பு கூர்வதுபோல நாமும் அன்பு கூரவல்ல ஒரு புதிய இதயத்தை நமக்குத் தருகிறார்” என்ற வார்த்தைகளை, தன் டுவிட்டர் செய்தியாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஒன்பது மொழிகளில் ஒவ்வொருநாளும் டுவிட்டர் செய்திகளை வழங்கிவரும் திருத்தந்தையின் @pontifex என்ற இணையதளத்தில், இதுவரை 628 டுவிட்டர் செய்திகள் பதிவாகியுள்ளன; மற்றும், இச்செய்திகளை தொடர்வோர் எண்ணிக்கை 64,09,371 பேர் என்று இந்த இணையத்தளம் கூறுகிறது.

மேலும், இவ்வியாழன் காலையில், கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான Knights of Maltaவின் தலைவர், Matthew Festing, திருப்பீட பொருளாதாரத் துறையின் செயலர், கர்தினால் ஜார்ஜ் பெல், பெரு நாட்டு ஆயர் பேரவையின் 4 ஆயர்கள் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.