2015-06-25 17:05:00

சகோதரி நிர்மலாவின் மறைவுக்கு கர்தினால் கிரேசியஸின் செய்தி


ஜூன் 25,2015. அன்னை தெரேசாவின் பிறரன்புச் சகோதரிகள் சபைத் தலைவியாகப் பணியாற்றி, அண்மையில் இறைபதம் சேர்ந்த அருள்சகோதரி நிர்மலா ஜோஷி அவர்களின் அடக்கச் சடங்கு இப்புதனன்று மாலை இடம்பெற்றது.

அன்னை தெரேசாவுக்குப்பின் 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை அச்சபையை தலைமையேற்று வழிநடத்திய அருள்சகோதரி நிர்மலா அவர்களின் மறைவு குறித்து தன் இரங்கல் செய்தியை வெளியிட்ட மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ் அவர்கள், அருள்சகோதரி நிர்மலா அவர்களின் தினசரி செபங்கள் தனிப்பட்ட முறையில் தனக்கும், இந்திய மற்றும் ஆசிய திரு அவைக்கும் பெருமளவில் உதவியுள்ளன என்றார்.

சகோதரி நிர்மலா அவர்கள் தனக்களித்த பெரிய கொடையாக,  அவரின் தினசரி செபம் இருந்தது என்ற கர்தினால், தன் புனித வாழ்வின் மூலம் திருவைக்கு அருள்சகோதரி நிர்மலா உதவியுள்ளார் என்றார்.

 1934ம் ஆண்டு இந்து குடும்பத்தில் பிறந்த அருள்சகோதரி நிர்மலா அவர்கள்,  அன்னை தெரேசாவின் பணிகளால் கவரப்பட்டு, கத்தோலிக்க மறையைத் தழுவினார். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.