2015-06-25 17:14:00

இறைவனடி சேர்ந்த சிலிசியா முதுபெரும் தந்தை


ஜூன்,25,2015. ஆர்மேனிய கத்தோலிக்க வழிபாட்டு முறையின் சிலிசியா முதுபெரும் தந்தை, 19ம் நெர்செஸ் பெத்ரோஸ் (Nerses Bedros) அவர்கள், இவ்வியாழன் காலை இறைவனடி சேர்ந்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், வியாழன் காலை உள்ளூர் நேரம் 8.45 மணிக்கு, மாரடைப்பால் இவர் இறந்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

எகிப்து நாட்டின் கெய்ரோவில் 1940ம் ஆண்டு பிறந்த ஆர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 19ம் நெர்செஸ் பெத்ரோஸ் அவர்கள், 1999ம் ஆண்டு, சிலிசியாவின் ஆர்மேனிய கத்தோலிக்க வழிபாட்டு முறைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களிடமிருந்து பேராயருக்குரிய பாலியத்தைப் பெற்றுக்கொண்டவர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.