2015-06-24 15:50:00

திருத்தந்தை : உரையாடல்கள், உடன்பிறந்தோர் உணர்வை விதைக்கும்


ஜூன்,24,2015. போரினாலும், வெறுப்பினாலும் காயப்பட்டிருக்கும் நம் இன்றைய உலகில், உரையாடல்களை வளர்க்க மேற்கொள்ளப்படும் சிறு செயல்பாடுகள், அமைதியையும், உடன்பிறந்தோர் உணர்வையும் இவ்வுலகில் விதைக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கத்தோலிக்க, புத்த உரையாடலில் கலந்துகொள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வருகை தந்துள்ள உறுப்பினர்களை, இப்புதன் காலை, திருத்தந்தை, அருளாளர் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு, தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஜூன் 23, இச்செவ்வாய் முதல், 27, வருகிற சனிக்கிழமை முடிய, உரோம் நகருக்கு அருகே அமைந்துள்ள காஸ்தல் கந்தோல்போ என்ற இடத்தில் Focolare என்ற அமைப்பினரின் தலைமையகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஆஞ்சலஸ், மற்றும் வாஷிங்க்டன் ஆகிய நகரங்களிலிருந்து உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.

பல்சமய உரையாடல் திருப்பீட அவை, Focolare அமைப்பு, மற்றும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழு ஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கினை, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் துவக்கி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.