2015-06-23 16:28:00

திருத்தந்தையின் டுவிட்டர் : கடவுளின் அன்பு இலவசமானது


ஜூன்,23,2015. கடவுளின் அன்பு இலவசமானது, அதற்குக் கைமாறாக அவர் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற கருத்தை மையப்பொருளாக வைத்து  தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கடவுளின் அன்பு இலவசமானது. அதற்கு கைமாறாக இறைவன் நம்மிடம் எதையும் கேட்பதில்லை. அவர் நம்மிடம் கேட்பதெல்லாம், அவரின் அன்பு நம்மால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே' என தன் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.