2015-06-23 16:51:00

கேரளாவில் மரியன்னை கோயில் மீது தாக்குதல்


ஜூன்,23,2015. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தங்கசேரி எனும் இடத்தில், திருச்சிலுவை கத்தோலிக்க ஆலயத்தின் அருகே அமைந்துள்ள, அன்னைமரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு கோவில் மீது இச்செவ்வாய்க் கிழமை அதிகாலை சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலுக்குள் எச்சரிக்கைகள் தாங்கிய சில காகிதங்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அவற்றில், ஆயர்  ஜெரோம் நகர் வணிக வளாகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து, மரியன்னை கோயிலுக்கு முன்னர் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், கைவிரல் ரேகை பதிவை சேகரித்ததுடன், கொல்லம் மாவட்டம் மேற்கு சரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 

ஆதாரம்: Dinamalar/வத்திக்கான வானொலி.








All the contents on this site are copyrighted ©.