2015-06-19 16:09:00

திருத்தந்தையின் திருமடலுக்கு ஐ.நா. பாராட்டு


ஜுன்,19,2015. மனிதகுலம் எதிர்நோக்கும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த முக்கிய சவால்களுக்குத் தீர்வுகாண, புதிய கலந்துரையாடல்கள் தேவைப்படுவது பற்றிய திருத்தந்தையின் புதிய திருமடல் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்

பெரும்பாலும் மனித நடவடிக்கைகளின் விளைவாக இடம்பெறும் உலக வெப்பநிலை அதிகரிப்பு குறித்து திருத்தந்தை தன் திருமடலில் குறிப்பிட்டுள்ளதை எடுத்தியம்பியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், எல்லா அரசுகளும் தங்கள் தேசிய நலனையும் தாண்டி, உலக பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஓர் ஒழுக்கரீதி சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால், அனைவரின் ஒன்றிணைந்த, அதேவேளை, அவசர நடவடிக்கை தேவைப்படுகின்றது என்பதில், தானும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒத்த கருத்துடையவர்களாக உள்ளோம் எனவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கூறினார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். 

ஆதாரம் : U.N. /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.