2015-06-18 16:55:00

கொலம்பியா, கட்டுப்பாடு நிறைந்த ஒரு நாடாக மாறவேண்டும்


ஜுன்,18,2015. கடந்த 60 ஆண்டுகளாக வன்முறையில் வாழ்ந்துவந்த கொலம்பியா நாடு, கட்டுப்பாடு நிறைந்த ஒரு நாடாக மாறுவதே, அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய ஒரு பரிசு என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

நாட்டில் நிலவிவரும் வன்முறைகளை எதிர்த்து, கொலம்பியாவின் துமாக்கோ (Tumaco) நகரில், இச்செவ்வாயன்று, 5000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட ஓர் அமைதிப் பேரணியில் உரையாற்றிய துமாக்கோ ஆயர், Girón Higuita அவர்கள், வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது எளிய மக்களே என்று வலியுறுத்தினார்.

அரசும், ஏனைய சமுதாய நிறுவனங்களும் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை, கொரில்லா குழுக்கள் தோல்வியடையச் செய்கின்றன என்றாலும், அரசு தன் முயற்சிகளை நிறுத்தக் கூடாது என்று ஆயர் Higuita அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

போதைப்பொருள் வர்த்தகம் கொலம்பியாவில் நிகழும் பல்வேறு வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.