2015-06-18 17:03:00

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் - கர்தினால் Toppo


ஜுன்,18,2015. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், மதக் கொள்கைகளைப் பரப்பவும் முழு உரிமையைத் தரும் அற்புதமான சட்டங்களைக் கொண்டது இந்திய குடியரசு என்று இராஞ்சி பேராயர், கர்தினால் Telesphore Toppo அவர்கள் கூறினார்.

அண்மைய மாதங்களில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் பல்வேறு வன்முறைகள் குறித்து ஆசிய செய்திக்கு அளித்த ஒரு பேட்டியில், தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்து இராஜ்யம், இந்து நாடு என்ற எண்ணங்களை தீவிரமாகப் பரப்பி வந்த ஒரு கட்சி என்று குறிப்பிட்டார்.

இந்தியச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மத உரிமையை ஆதரித்து இந்தியப் பிரதமர் அவ்வப்போது பேசிவந்தாலும், தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சி, அனைத்தையும் இந்து மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட ஒரு கட்சி என்பதை மறுக்க இயலாது என்று கர்தினால் டோப்போ அவர்கள் கூறினார்.

நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றபின், இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று அனைத்துல மதச் சுதந்திரம் என்ற அமைப்பு அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கர்தினால் டோப்போ அவர்களுக்கும் அண்மையில் கொலைமிரட்டல் மடல் ஒன்று வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.