2015-06-16 15:07:00

உலக ஆயர்கள் மாமன்ற பட்டியலில் சேலம் ஆயர்


ஜூன்,16,2015. வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளின் ஆயர்கள் பேரவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பதிலாளர்களின் பெயர்கள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சனவரி 31 மற்றும் மார்ச் 25 தேதிகளில் வெளியிடப்பட்ட பிரதிநிதிகள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், கோவா பேராயர் Filipe Neri António Sebastião DO ROSÁRIO FERRÃO, புனலூர் ஆயர் Selvister PONNUMUTHAN, ஷில்லாங் பேராயர் Dominic JALA ஆகியோர் உறுப்பினர்களாகவும், சேலம் ஆயர் சிங்கராயன் செபஸ்தியானப்பன் அவர்கள் பதிலாளராகவும் பங்கெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து Kurunegala ஆயர் Harold Anthony PERERA அவர்கள் உறுப்பினராகவும், அனுராதபுர ஆயர் Norbert Marshall ANDRADI அவர்கள் பதிலாளராகவும் பங்கெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற அக்டோபர் 4 முதல் 25 வரை வத்திக்கானில் நடைபெறும்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.