2015-06-16 15:17:00

ஆபத்தைச் சந்திக்கும் மனிதர்களைப் பாதுகாக்க உலகுக்கு அழைப்பு


ஜூன்,16,2015. WCC உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும், கடல் அல்லது வேறு எந்தப் பயணத்திலோ ஆபத்தை எதிர்நோக்கும் மனிதரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு அனைத்துலக சமுதாயத்திற்கு நன்னெறி மற்றும் சட்டமுறையான கடமை உள்ளது என்று இத்திங்களன்று கூறியுள்ளது.

உலகின் பல பகுதிகளின் குடிபெயரும் எண்ணற்ற மக்கள் குறித்து, குறிப்பாக, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள WCC மன்றம், இந்நிலைமை புதிது இல்லையெனினும், இக்காலத்தில் இத்துன்பநிலை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

2015ம் ஆண்டு சனவரியிலிருந்து 1,800க்கும் மேற்பட்ட குடிபெயர்வோர் மத்திய தரைக் கடலில் இறந்துள்ளனர். இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், 25 ஆயிரம் ரோகிங்க்யா மற்றும் பங்களாதேஷ் மக்கள், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கென மனித வர்த்தகர்கள் படகுகளில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கிடையே, குடிபெயரும் மக்களில் எவ்வளவு பேரை தங்கள் தங்கள் நாடுகளில் ஏற்கலாம் என்பது குறித்து 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் லக்சம்பர்க்கில் விவாதித்து வருகின்றன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.