2015-06-15 16:34:00

இறைவனின் படைப்பைக் காக்க வேண்டிய மனிதர்களின் பொறுப்பு


ஜூன்,15,2015. இறைவனின் படைப்பைக் காக்க வேண்டிய மனிதர்களின் பொறுப்பு குறித்த தன் சுற்றுமடல், வரும் வியாழனன்று வெளியிடப்படும் என்பதை தன் மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுற்றுச்சூழல் அழிவுக்குள்ளாகி வரும் இந்நாட்களில், நம்முடைய புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம், பெரிய அளவில் தேவைப்படுகின்றது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நமக்கு வழங்கியுள்ள பொது வீடாகிய இவ்வுலகிற்கான நம் கடமைகளை வலியுறுத்த தன் சுற்றுமடல் உதவும் என நம்புவதாகவும் கூறினார்.

இஞ்ஞாயிறுன்று உலகில் சிறப்பிக்கப்பட உலக இரத்ததான தினம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இரத்த தானம் செய்வோருக்கு தன் நன்றியை வெளியிடுவதாகவும், இவர்களின் முன்மாதிரிகையை இளையோர் அனைவரும் பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.