2015-06-08 16:18:00

மத சிறுபான்மையினரை பாகிஸ்தான் அரசு காக்க இங்கிலாந்து அழைப்பு


ஜூன்,08,2015. மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானில் நிறுத்தப்பட  அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பிரித்தானிய  அரசு வலியுறுத்தும் என நம்புவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் Sandha எனுமிடத்தில் கிறிஸ்தவ சமுதாயமும் கிறிஸ்தவ கோவில் ஒன்றும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆயர் பேரவையின் வெளிவிவகாரத்துறை தலைவர் ஆயர் Declan Lang பேசுகையில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு பாராமுகமாய் இருந்தால், சிறுபான்மை மதத்தவர் பலர் தங்கள் மாண்பையும், வீடுகளையும், வாழ்வையும் தொடர்ந்து இழக்கவேண்டியிருக்கும் என கவலையை வெளியிட்டார்.

மக்களின் மாண்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை பிரித்தானிய அரசு, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் வலியுறுத்தும் என்பதை தாங்கள் உறுதியாக நம்புவதாக, இங்கிலாந்து ஆயர்கள் சார்பில் பேசிய ஆயர் Declan Lang கூறினார். 

ஆதாரம் : Catholicherald/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.