2015-06-03 16:42:00

சீனாவில் கப்பல் விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


ஜூன்,03,2015.  சீனாவின் Yangtze ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில், பலியான மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் மறைக்கல்வி போதகத்தின் இறுதியில், இக்கப்பல் விபத்தில் பலியானவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாருக்காவும் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

“கிழக்கு விண்மீன்” என்ற கப்பல் மோசமான காலநிலையால் இத்திங்கள் இரவு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 456 பேரில் அதிகமானோர் வயதானவர்கள்.

இதுவரை 18 பேர் இறந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.