2015-06-02 15:28:00

Nebraskaவில் மரண தண்டனை இரத்தானதற்கு ஆயர்கள் வரவேற்பு


ஜூன்,02,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Nebraska மாநிலத்தில் மரண தண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டிருப்பது, அந்நாட்டில் வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் ஒரு முயற்சியாக உள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்வதற்கு ஒரே மனதாக இசைவு அளித்துள்ள Nebraska மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணைக்குழுத் தலைவரான Miami பேராயர் Thomas Wenski.

அறிவற்ற வன்செயல்களால் மனித வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் பேராயர் Wenski.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1976ம் ஆண்டில் மரண தண்டனை சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தபின்னர், Nebraska மாநிலம், இச்சட்டத்தை இரத்து செய்துள்ள 19வது மாநிலமாக உள்ளது.

சீனா, ஈரான், சவுதி அரேபியா, ஈராக், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய ஐந்தும் உலகில் மரண தண்டனையை அதிகமாக நிறைவேற்றும் நாடுகளாக உள்ளன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.