2015-06-01 16:22:00

"ஆசிய கிறிஸ்தவக் கருத்தரங்கு" நிறைவேற்றிய தீர்மானம்


ஜூன்,01,2015 இறையன்பை இவ்வுலகிற்கு பறைசாற்றும் சாட்சிகளாக, ஒருமித்த மனதோடு வாழ்வதற்கு ஆசியாவின் அனைத்து நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்மானம் இந்தோனேசியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

"ஆசிய கிறிஸ்தவக் கருத்தரங்கு" என்ற பெயருடன் இயங்கிவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு ஒன்று, மே மாத இறுதி வாரத்தில், இந்தோனேசியாவின் தலைநகர், ஜகார்த்தாவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தின் இறுதியில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

28 நாடுகளைச் சேர்ந்த 440க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கிறிஸ்தவக் கருத்தரங்கில், உரையாடல் கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதென கூறப்படுகிறது.

இந்த அவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலர் ஜார்ஜ் மேத்யூஸ் அவர்கள், இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பகைமைச் சூழல்களைத் தீர்க்கும் ஒரேவழி உரையாடல் மட்டுமே என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.